Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

அக்டோபர் 3-ல் ஜேஇஇ பிரதான தேர்வு : மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

ஜேஇஇ பிரதான தேர்வு, அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

நடப்பாண்டு முதல் ஜேஇஇமுதன்மை தேர்வு 4 கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முன்னதாக 2 கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன.3-ம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25வரை நடந்தது. 4-ம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரைநடைபெறுகிறது.

இந்நிலையில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான பிரதான தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐஐடிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ பிரதான தேர்வு கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வரும் அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x