Published : 28 Jul 2021 03:16 AM
Last Updated : 28 Jul 2021 03:16 AM

சென்னை மண்டல புதிய பாஸ்போர்ட் அதிகாரி பொறுப்பேற்பு :

சென்னை மண்டலத்தின் 31-வது புதிய பாஸ்போர்ட் அதிகாரியாக எஸ்.கோவேந்தன் பொறுப்பேற்றுள்ளார்.

2009-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஐஎஃப்எஸ் அதிகாரியான இவர், போர்ச்சுக்கல், பூட்டான், பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களில் பணியாற்றி உள்ளார். பிரேசில் நாட்டில் நடைபெற்ற 6-வது மற்றும் 11-வது பிரிக் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் அங்கு சென்ற போது அவரது பயணத்தைத் திறம்பட கையாண்டார்.

கோவேந்தன் சென்னையில் உள்ள அழகப்பா பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும், கிண்டி அண்ணாபல்கலைக்கழத்தில் பொறியியல் பட்டமும் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x