Published : 28 Jul 2021 03:19 AM
Last Updated : 28 Jul 2021 03:19 AM

2-ம் நாள் தகுதி தேர்வில் 333 பேர் தேர்ச்சி :

வேலூர்: வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புடன் உடற் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்று வரும் தேர்வு முகாமில் இரண்டாம் நாளாக நேற்றைய தேர்வில் பங்கேற்க 502 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில், 93 பேர் பங்கேற்காத நிலையில் 409 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு அளத்தல் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டம் அல்லது 100 மீட்டர் ஓட்டத்தில் 76 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, இரண்டாம் கட்ட தேர்வுக்கு 333 பேர் தகுதி பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x