Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM
திருவண்ணாமலை/திருப்பத்தூர்: தென்பெண்ணையாற்றின் துணை ஆறான மார்கண்டேய ஆற்றில் கர்நாடக அரசு கட்டியுள்ள யார்கோல் அணையை அகற்ற வேண்டும். காவிரியில் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுப்ரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் நம்பிராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்தையன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இதில், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில், கர்நாடக அரசு கட்டியுள்ள மார்கண்டேய ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணையை அகற்றக்கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT