Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

கனமழையால் 100 அடியை கடந்த : ஆழியாறு அணையின் நீர்மட்டம் :

கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்தது.

பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணை 120 அடி உயரமும், 3.25 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணை மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. பொள்ளாச்சி, கோவை பகுதியின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த ஆண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இம்மாத தொடக்கத்தில் 83 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 100 அடியை நேற்று முன்தினம் மதியம் எட்டியது. நேற்றைய நிலவரப்படி 103 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 2119 கன அடி நீர்வரத்து இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x