Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வின் பேச்சைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில்நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இழிவாகப் பேசியதாக கண்டனம் தெரிவித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மதுவந்தி கூறும்போது, ‘‘மதக் கலவரத்தை உருவாக்கும் வகையில்ஜார்ஜ் பொன்னையா பேசியுள்ளார். திமுக மற்றும் தமிழக முதல்வரையும்கூட அவர் இழிவாகப் பேசியுள்ளார். ஆனால், திமுக ஏன் இன்னும் வாய் மூடி உள்ளது என்று தெரியவில்லை. மதம், தேசியம், ஒருமைப்பாட்டை தவறாகப் பேசினால் பாஜக பார்த்துக் கொண்டிருக்காது. பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி இல்லை’’ என்றார்.
இதேபோல, தமிழகம் முழுவதும் பாஜக மாவட்டத் தலைவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT