Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM
தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று ரூ.6.98 லட்சத்துக்கு பட்டுக் கூடு வர்த்தகம் நடந்தது.
தருமபுரி 4 ரோடு அருகில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு நேற்று தருமபுரி உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் 24 பேர் வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதன் மூலம் 1836.15 கிலோ (54லாட்) வெண்பட்டுக்கூடுகள் தரத்துக்கு ஏற்ப 1 கிலோவுக்கு அதிகபட்ச விலையாக ரூ.442-ம், குறைந்த பட்சவிலையாக ரூ.308-ம், சராசரி விலையாக ரூ.380.65-ம் கிடைத்தது.
இந்த ஏல விற்பனை மூலம் நேற்று ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்து 934-க்கு வர்த்தகம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT