Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை பெற்று தர சிறப்பு குழு : அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல்

தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மதுரை மாநகராட்சி புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். பின்னர், மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவிகள் விடுதியை ஆய்வு செய்தார். எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறியதாவது: தமி ழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகளுக்காக புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

தமிழகத்தில் 13,553 இலங்கை அகதிகள் குடும்பங்கள் அகதி முகாமுக்கு வெளியே வசித்து வருகின்றன.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x