Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் ஆடித்தபசு விழா நடைபெற்றது. அம்பாள் தபசுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சுவாமியும், சப்பர வாகனத்தில் அம்பாளும் எழுந்தருளி கோயிலை வலம்வந்தனர். பின்னர் சுவாமியும், அம்பாளும் மாலை மாற்றிக்கொண்ட வைபவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரியில் ஆராட்டு நடைபெற்றது. சமூக இடைவெளி யுடன் பக்தர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT