Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் 700 கிலோ குட்கா பதுக்கிய 2 பேர் கைது :

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே புதுக்குடையான்பட்டியில் உள்ள ஒரு வீட்டில், நகர காவல் நிலைய ஆய்வாளர் குருநாதன் தலைமையிலான போலீஸார் நேற்று சோதனையிட்டனர். இதில், அந்த வீட்டிலிருந்த 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கே.கோவிந்தராஜ்(35) என்பவரை போலீஸார் கைது செய்து, ரூ.70 ஆயிரம் ரொக்கம், ஒரு காரை பறிமுதல் செய்தனர். இதேபோல, புதுக்கோட்டை ஜீவா நகர் 3-ம் வீதியில் உள்ள வீட்டில் 200 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த ஏ.துரைராஜை(65) கைது செய்ததுடன், அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x