Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

கைதி தற்கொலை தொடர்பாக விசாரணை :

வேலூர்: வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர், கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி பரோலில் சென்றவர் மீண்டும் சிறை திரும்பவில்லை.

இது தொடர்பாக கடந்த 19-ம் தேதி பாகாயம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில், வேல்முருகன் அவரது வீட்டுக்கு அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக சிறை காவலர்களிடம், மத்திய சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி விசாரணை செய்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x