Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM
பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும்27-ம் தேதி வரை தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 துணைத் தேர்வுஆகஸ்ட் 6 முதல் 19-ம் தேதி வரைநடைபெற உள்ளது. இதில், பிளஸ் 2 மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தேர்வு எழுத, சேவை மையங்கள் மூலம் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த வாய்ப்பை தவறவிடும்பட்சத்தில், தத்கால் முறையில் ரூ.1,000கூடுதல் கட்டணத்துடன் 28-ம் தேதிவிண்ணப்பிக்கலாம். கடந்த மேமாத பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், மீண்டும்விண்ணப்பிக்க வேண்டாம்.தேர்வுக்கான காலஅட்டவணை, சேவை மையங்கள் மற்றும் தேர்வு வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களைwww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT