Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

ஆதார் - செல்போன் எண்களை இணைக்க தபால்காரர் சேவை :

இன்றைய சூழலில், அரசு மற்றும் அரசு சாராத அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் அவசியம் என்ற நிலை உள்ளது. இதனிடையே, அரசின் சலுகைகளை பெறுவதற்கும், சில திட்டங்களில் முன்பதிவு செய்வதற்கும் ஆதாரில் செல் போன் எண் இணைக்கப்பட வேண்டியது கட்டாயம்.

இவ்வாறு ஆதாரில் செல்போன் எண்ணை இணைக்க, இதுவரை ஆதார் மையங் களுக்கோ அல்லது தபால் துறையின் கீழ் இயங்கும் கட்டண வங்கிகளுக்கோ (ஐபிபிபி) செல்ல வேண்டி இருந்தது.

தற்போது இந்த வழிமுறையை மத்திய அரசு எளிதாக்கி இருக்கிறது. அதன்படி, தபால்காரர்மூலமாகவே வீட்டில் இருந்தபடியே ஆதாரில் செல் போன் எண்ணை இணைக்கவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும் என்று மத்திய அரசு தெரிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x