Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக்கழகத்தின் துணைவேந்தராக எம்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வரும் எம்.கிருஷ்ணன், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை,இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை அப்பதவியில் இருப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்புக்கு வருவதற்கு முன்பு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை தலைவராக கிருஷ்ணன் பணியாற்றினார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மத்திய பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணிபுரிந்துள்ள கிருஷ்ணன், லண்டனில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சிக் குழு, இந்தியாவின் அறிவியல், சுற்றுச்சூழலுக்கான சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார். பல்வேறுவெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.
சர்வதேச கருத்தரங்குகளில் 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். அவரது 60 ஆய்வுக் கட்டுரைகள், யுஜிசி இதழ்களில் வெளியாகியுள்ளன.
நுண் உயிரியல் துறை தொடர்பாக 2 நூல்களையும் கிருஷ்ணன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT