Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

`வண்டலூர் பூங்காவில் : சிங்கங்களுக்கு கரோனா தொற்று இல்லை' :

சென்னை

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 15 சிங்கங்கள் இருந்தன. அவற்றில் 10 சிங்கங்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 2 சிங்கங்கள் உயிரிழந்தன. இந்நிலையில் சிகிச்சை பெற்ற 8 சிங்கங்கள், தொற்றால் பாதிக்கப்படாத 5 சிங்கங்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைத்துக்கும் கரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இருப்பினும், வன உயிரின மருத்துவர்கள் மூலம், சிங்கங்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x