Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில் நகராட்சி நிர்வாக மண்டல ஆணையர் கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் தி.வேல்முருகன், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களை அவரிடம் அளித்திருந்தார். அதன்பேரில் ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக இயக்குநர் தற்போது பண்ருட்டி நகராட்சியில் பணிபுரியும் 9 நகராட்சி இள நிலை உதவியாளர் ஊழியர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT