Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM
மதுரை சோழவந்தான் அருகே இரும்பாடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியின் குழந்தை கடந்த மாதம் பாம்பு கடித்து இறந்தது. அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த பிரபாகரன் என்பவர், தான் வருவாய் அலுவலராகப் பணிபுரிவதாகவும், நிவாரண உதவி பெற்றுத்தருவதற்கு ரூ.20 ஆயிரம் தருமாறு கேட்டார். தமிழ்ச்செல்வி முதல் கட்டமாக ரூ.6 ஆயிரத்தைத் தந்துள்ளார். அங்கிருந்து சென்ற பிரபாகரன், மீண்டும் திரும்பி வந்து மேலும் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். சந்தேகமடைந்த அப்பகுதியினர் பிரபாகரனை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிரபாகரன் (37) சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் என்றும், நாளிதழ்களில் வெளியாகும் விபத்து மரணச் செய்திகளை படித்து, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT