Published : 23 Jul 2021 07:12 AM
Last Updated : 23 Jul 2021 07:12 AM
இதுதொடர்பாக, இறைச்சிக் கடையின் உரிமையாளர் ராஜசேகர் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘எனது சொந்த ஊர் மதுரை. கடந்த மூன்று வருடங்களாக அமர்ஜோதி நகர் பகுதியில் இறைச்சி வியாபாரம் செய்கிறேன். முதல் முறையாக ஆடி ஆஃபரை அறிவித்துள்ளேன். பெற்றோர் மீது பாசம், மரியாதை அதிகமுள்ளதால், எனது இறைச்சிக் கடைக்கு ‘அம்மா அப்பா ஆட்டுக் கறிக்கடை’ என பெயர் வைத்துள்ளேன்.
இங்கு ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.560, குடல்கறி ரூ.380, தலைக்கறி ரூ.180, ரத்தம் ஒரு கப் ரூ.30, நாட்டுக் கோழி ஒரு கிலோ ரூ.350 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. கடந்த 18-ம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை எங்களது கடையில் இந்த ஆடி ஆஃபர் வழங்கப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வியாபாரம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவரவே இச்சலுகையை வழங்குகிறோம். இலவசமாக கொடுக்கும் குடம், தேங்காய் போன்றவற்றை மொத்தமாக வாங்குவதால் எங்களுக்கு இழப்பு ஏதும் இல்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT