Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

பம்மல் அருகே மூச்சுத்திணறி இருவர் உயிரிழப்பு :

பல்லாவரம்

பல்லாவரத்தை அடுத்த பம்மலைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (61). இவர் மனைவி புஷ்பலட்சுமி (53), மகள் மல்லிகா (38) பேரன்விஷால் (11) உடன் வசித்து வந்துள்ளார்.

வீட்டில் நேற்று முன்தினம் இரவு கொசுவை விரட்ட பிளாஸ்டிக் டப்பாவில் புகைமூட்டம் போட்டுவிட்டு தூங்கிவிட்டனர். நேற்று வீட்டிலிருந்து யாரும் வராத நிலையில் வீட்டினுள்புகைமூட்டம் காணப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சொக்கலிங்கம், அவரது மனைவி புஷ்பலட்சுமி, மகள் மல்லிகா மற்றும் பேரன் விஷால் அனைவரும் மயங்கிய நிலையில் இருந்தனர்.

உடனடியாக பொதுமக்கள் அனைவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் சொக்கலிங்கத்தின் மனைவி புஷ்பலட்சுமி ஏற்கெனவே, இறந்தது தெரியவந்தது. மேலும் சொக்கலிங்கம், மகள் மல்லிகா ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல் எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஷால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x