Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

சிவகாசியில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு :

சிவகாசியில் தனியார் நிறு வனங்களில் பணிபுரிந்த 17 குழந்தை தொழிலாளர்களை வருவாய்த் துறையினர் மீட்டனர்.

சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் பாலிபேக் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. அதையடுத்து, சிவகாசி சார்-ஆட்சியர் பிரித்திவிராஜ் மற்றும் வருவாய்த் துறை அலு வலர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, இனாம் ரெட்டிய பட்டி பகுதியில் உள்ள 3 பட்டாசு ஆலைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

விஸ்வநத்தம், மணிநகரம் பகுதிகளில் இயங்கி வந்த பாலிபேக் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது 3 சிறுமிகள் உட்பட 14 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x