Published : 21 Jul 2021 03:15 AM
Last Updated : 21 Jul 2021 03:15 AM

நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம் : டிஜிபி அலுவலகத்தில் புகார்

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு. படம்: பு.க.பிரவீன்

சென்னை

பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். இதுகுறித்து டிஜிபி அலுவலகத்தில் குஷ்பு புகார் கொடுத்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், குஷ்புவின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக தெரிகிறது. அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியிருந்த அனைத்து ட்வீட்களும் அழிக்கப்பட்டுள்ளன. அவரது ஐ.டி. பெயர் ‘briann’ என மாற்றப்பட்டுள்ளது.

தனது ட்விட்டர் கணக்கை முடக்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் குஷ்பு நேற்று மாலையில் புகார் கொடுத்துள்ளார்.

ட்விட்டர் கணக்கு முடக்கம் தொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனது ட்விட்டர் கணக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டர் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக எனது ட்விட்டர் கணக்கில் பதியப்படும் பதிவுகள் என்னுடையது அல்ல’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x