Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாகஒளிபரப்ப அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பக் கோரி 2012-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை அப்போதைய அதிமுக அரசு நிலுவையில் போட்டுவிட்டது.
‘ஆட்சிக்கு வந்தால் பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம்’ என்றுதேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்தது. ஆனாலும், முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையின் முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.
நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதம் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT