Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

சொகுசு காருக்கு வரி விவகாரம் - விஜய் மேல் முறையீட்டு மனு நீதிமன்ற விசாரணைக்கு ஏற்பு :

சென்னை

சொகுசு காருக்கு வரி விதிக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் விஜய் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை வேறு அமர்வு முன்பாக பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்டர் சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் விஜய் 2 வாரங்களுக்குள் நுழைவுவரி செலுத்த வேண்டும் என்றும், மேலும் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தும், நடிகர் விஜய் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தும் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் இந்த மேல்முறையீட்டு மனுவை அனுமதிக்கக்கோரி விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் வேறு அமர்வுக்கு மாற்ற நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x