Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

கூடுதல் காப்பு வைப்புத் தொகை - ஆய்வு நடத்த தமிழ்நாடு மின் வாரியம் உத்தரவு :

வீடுகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கும்போது, காப்பு வைப்புத் தொகை என்றபெயரில் குறிப்பிட்ட தொகையை நுகர்வோரிடம் இருந்து மின்வாரியம் வசூலிக்கிறது. மின்பயன்பாட்டை பொறுத்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தொகை மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி, மின் இணைப்பு பெறும்போது தெரிவிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மின்சாரம் பயன்படுத்தினால், கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கப்படும். இதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள வட்டியை மின்வாரியம் வழங்குகிறது.மின்பயன்பாடு குறைந்தால் வைப்புத் தொகை வசூலிப்பதில்லை.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக, 2020-21 நிதியாண்டுக்கான கூடுதல் காப்புவைப்புத் தொகை வசூலிக்கும்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கூடுதல் காப்பு வைப்புத் தொகை குறித்து ஆய்வு நடத்த மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மின்நுகர்வோரின் காப்பு வைப்புத் தொகை, தற்போது கணக்கிடப்பட்டுள்ளதைவிட குறைவாக இருப்பின், மீதமுள்ள தொகையை வசூலிக்கவும், அதைசரிகட்ட செய்யவும் அனைத்து மின்பகிர்மான வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x