Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

விளை நிலங்களில் - எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் : முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில், எரிவாயுக் குழாய்களைசாலையோரம் பதிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்மையில் ஒசூர் வழியாக உத்தனபள்ளி வரை விவசாய நிலங்கள் இடையே எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், கெலமங்கலத்தில் விளை நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கும் பணிகள் மும்முரமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதுடன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட தருமபுரி - ஓசூர் நான்கு வழிச் சாலையோரம் குழாய்கள் அமைக்க வேண்டும்என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

எனவே, விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி,வேளாண் நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் நெடுஞ்சாலைஓரமாக குழாய்களைப் பதிக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழகமுதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x