Published : 18 Jul 2021 03:15 AM
Last Updated : 18 Jul 2021 03:15 AM

நகை பாலீஷ் போடுவதாகக் கூறி பெண்ணிடம் இரண்டரை பவுன் நகை பறிப்பு :

புதுச்சேரி: புதுச்சேரி நெட்டப்பாக்கம் அடுத்த செம்படபேட்டை புதுநகரைச் சேர்ந்தவர் ஜமுனா (27). நெட்டப்பாக்கம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் அவர் வீட்டில் இருந்தபோது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் தங்கம், வெள்ளி பொருட்களுக்கு பாலீஷ் போடுவதாக ஜமுனாவிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய அவர், தான் அணிந்திருந்த இரண்டரை பவுன் தாலி சரடை பாலீஷ் செய்து தருமாறு அவர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் ஜமுனாவிடம் தண்ணீர் கேட்கவே, அவர் தண்ணீர் எடுத்துவர உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது அவர்கள் 2 பேரும் நகையுடன் மாயமாகிவிட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜமுனா நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x