Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

கடலூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் - தார்பாய்களைக் கொண்டு நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் :

நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் செயல்படும் கொள்முதல் நிலையங்களில் தார் பாய்களை கொண்டு நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என கடலூர் ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

கடலூர் ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் நேற்று கடலூரை அடுத்த தோட்டப்பட்டு, அனுக்கம்பட்டு பகுதிகளில் செயல்பட்டுவரும் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை பார்வையிட்டார். நெல் ஈரப்பத பரிசோதனை செய்வதை ஆய்வு செய்தார். இதையடுத்து குறிஞ்சிப்பாடி ஒழுங்கு முறை விற்பனை நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மற்றும் எள் மூட்டைகள் குறித்து ஆய்வு செய்தார்

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியது:

நெல் கொள்முதல் நிலையங் களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி வாங்கி பாதுகாக்க வேண்டும். விவசாயிகளின் சிட்டாமற்றும் ஆதார் எண்களை முறையாக பதிவு செய்து வரிசை சீட்டுகள் வழங்கப்பட்டு கொள்முதல் விரைவாக செய்யவேண்டும். நாள் ஒன்றுக்கு 1,000 மூட்டைகளுக்கு மேல் பிடிக்க வேண்டும். மழை ஏற்பட்டால் நெல் மூட்டைகள் நனையாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூடி பாதுகாக்க வேண்டும். விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல்கொள்முதல் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார், வட்டாட்சியர்கள் பாலமுருகன், சையதுஅபுதாகீர், நுகர்பொருள் வாணிப கழக கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x