Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM
புதுச்சேரி பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்துக்கு முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்.
புதுச்சேரி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு சொந்தமான தட்டாஞ்சாவடி வேதபுரீஸ்வரர் வரதராஜ பெருமாள் நகரில் உள்ள 2,841 சதுரடி இடத்தை, புதுச்சேரி பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்காக ரூ.1.05 கோடிக்கு கடந்த 2020 அக்டோபர் 26-ம் தேதி கிரையம் செய்யப்பட்டது. அந்த மனையில் புதிதாக அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். புதுச்சேரி கூட்டுறவு சங்கங்களின் துணைத் தலைவர் கணேஷ் வரவேற்றார். பதிவாளர் முகமது மன்சூர், சங்கத் தலைவர் தமிழொளி முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். கோவிந்தன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT