Published : 17 Jul 2021 03:15 AM
Last Updated : 17 Jul 2021 03:15 AM

திருச்சியில் சிவாஜி கணேசன் சிலையை திறக்க நாடக நடிகர்கள் கோரிக்கை :

திருச்சி: திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கே.எஸ்.கிருஷ்ணப்பா தலைமை வகித்தார். என்.கண்ணன், சுலைமான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க பொதுச் செயலாளர் முகமது மஸ்தான் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கடந்த 10 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை, முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கொண்டு திறக்க நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் சித்திரவேலு, பாட்சா, தங்கராசு, பாமா, யசோதா, சரஸ்வதி பாய், ஜெயலட்சுமி, மணிவேல், சுப்புராயலு, அழகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக நடிகர் ரோஷன் வரவேற்றார். நிறைவாக சங்க மேலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x