Published : 17 Jul 2021 03:15 AM
Last Updated : 17 Jul 2021 03:15 AM

உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து : காரைக்காலில் மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு :

காரைக்கால்: உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் நேற்று காரைக்காலில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி மாநிலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் நடவடிக்கை தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் நேற்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், மாவட்ட துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கரோனா பரவல் சூழலில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள், உள்ளாட்சித் தேர்தல் என்பதால் வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்க வேண்டிய முறை, வாக்குச் சாவடிகள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x