Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது :

கோவை மாநகரில் கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், கடந்த ஒரு வாரமாக தடுப்பூசிசெலுத்தும் பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், நேற்றுமுன்தினம் தடுப்பூசி வரப்பெற்றதால், மாநகரில் உள்ள 31 முகாம்களில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. காலை 6மணி முதலே டோக்கன்கள் அளிக்கப்பட்டன. தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மையம் முன் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பொதுமக்கள் காத்திருந்து ஊசி போட்டுக்கொண்ட. பி.என்.புதூர் பகுதியில் உள்ள மையத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப் படவில்லை. இதனால்அதிகாலைமுதலே காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்து டன் திரும்பி சென்றனர்.

மாநகராட்சி பகுதி முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x