Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM
பில்லூர் 3-வது குடிநீர் திட்டப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட 23 ஏக்கர்நிலத்தின் உரிமையாளர்களுக்கு ரூ.20 கோடி இழப்பீட்டு தொகைவழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 90ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதிக்குசிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற் றின் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், எதிர்கால தேவையைகணக்கில் கொண்டு, மாநகர பகுதியின் பயன்பாட்டுக்காக, ரூ.978 கோடி மதிப்பில் பில்லூர் 3-வது கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவுசெய்தது.
இத்திட்டத்துக்காக நீர் எடுக்கும் பகுதியில் இருந்து, சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள பகுதிவரை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கவும், தினமும் 170 எம்.எல்.டி அளவுக்கு தண்ணீர் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஏறத்தாழ 53.36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பகிர்மானக் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் சுமார் 30 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. தவிர, 113 கிலோ மீட்டர் தூரத்துக்கு 9 கிராமங்களை உள்ளடக்கிய பகுதி களில் இருந்து குறிப்பிட்ட ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் வேண்டியிருந்தது. நிலம் கையகப்படுத்தும் பணிக்காக, முதல்கட்டமாக ரூ.105 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது.
7 கிராமங்கள் கோவை வடக்கு தாலுகாவிலும், 2 கிராமங்கள் மேட்டுப்பாளையம் தாலுகாவிலும் வருகின்றன.குழாய்கள் பதிக்க தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணியை மாவட்ட வருவாய்த்துறை யினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, வருவாய்த் துறையினர் கூறும்போது, ‘‘இன்னும் 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. 415-க்கும் மேற் பட்ட நில உரிமையாளர்களில், முதல்கட்டமாக 135 உரிமையாளர் களிடம் இருந்து 23 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.20 கோடி தொகைநில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உரிமையாளர்களிடம் பேசி,நிலத்தை கையகப்படுத்த தேவையான நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT