Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
தருமபுரி மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 23 நபர்களுக்கு மனை பட்டா மற்றும் நலவாரிய அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.
தருமபுரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தருமபுரி மாவட்டம் மிட்டாநூல அள்ளி கிராமத்தைச் சேர்ந்த 6 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாவும், வத்தல்மலை கொட்டலாங்காடு பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் 17 நபர்களுக்கு தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய அட்டைகளும் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் திவ்யதர்சினி பயனாளிகளுக்கு மனை பட்டா மற்றும் நலவாரிய அட்டைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தேன்மொழி, வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT