Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

போலீஸ் எனக்கூறி பணம் பறித்த கும்பல் கைது :

மதுரையில் போலீஸ் எனக் கூறி பணம் பறித்த கும்பல் மற்றும் பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கூடல்புதூரைச் சேர்ந்தவர் கருப்பாயி (71). இவரது வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக, தகவல் அறிந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரத்பாபு (34) என்பவர் சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார்.

சிவகங்கையில் போலீஸாக வேலை பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட மேலூர் ராஜபிரபு (34), இவரது நண்பர் மேலூர் மச்சராஜ் (32) ஆகியோர் கருப்பாயியின் வீட்டுக்குச் சென்று, தாங்கள் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் என்றும், இன்ஸ்பெக்டர் ஹேமமாலா குழுவில் உள்ளவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் சரத்பாபுவிட மிருந்து ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர்.

சில நாட்களுக்குப் பிறகு வழக்குப் பதியாமல் இருக்க ரூ.10 ஆயிரம் தரும்படி சரத்பாபு விடம் மிரட்டல் விடுத்தனர்.

இதில் சந்தேகமடைந்த சரத்பாபு, அவரது போலீஸ் நண்பரிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலாவிடம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சரத்பாபு புகாரில் இன்ஸ்பெக்டர் ஹேம மாலா, கருப்பாயி வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்று விசாரணை செய்தார்.

இதில் போலீஸார் பெயரைச் சொல்லி பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த மச்சராஜ் (34), ராஜபிரபு (32) ஆகியோரையும், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாக கருப்பாயி (71), தெய்வானை (46), தேவமணி (27) உள்பட 5 பேரையும் கூடல்புதூர் போலீஸில் ஒப்படைத்தார்.

கூடல்புதூர் போலீஸார் அவர்களைக் கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x