Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

அரசியல் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது :

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள எடையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி பாண்டியன்(45). வளரும் தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளரான இவர், கடந்த 9-ம் தேதி இரவு வடசங்கேந்தி என்னுமிடத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக, எடையூர் சங்கேந்தியைச் சேர்ந்த மகாதேவன், ராஜேஷ் ஆகியோரை எடையூர் போலீஸார் கடந்த 10-ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி(25), பிரதீப்(26), சம்பத்(30) ஆனந்த்(32), சிதம்பரம்(30) ஆகிய மேலும் 5 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, இவர்கள் மீது எடையூர் மற்றும் திருத்துறைப்பூண்டி காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையின் எதிரே சைக்கிள் கடை நடத்தி வருபவர் மீது தாக்குதல் நடத்தியதாக, ரஜினிபாண்டியனின் ஆதரவாளர்கள் 20 பேர் மீது திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x