Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

ஜம்மு தாக்குதலில் பாக்.ராணுவத்துக்கு தொடர்பு :

ஜம்மு விமானப் படை தளத்தின் மீது நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்முவில் உள்ள விமானப் படை தளத்தின் மீது கடந்த மாதம் 27-ம் தேதி ஆளில்லா விமானம் மூலம் 2 முறை வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். கட்டிடங்கள் சேதமடைந்தன.

இது தொடர்பாக தேசியபாதுகாப்பு முகமை (ஐஎன்ஏ)விசாரணை நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் வெடிகுண்டுகளில் ‘பிரஷர் ப்யூஸ்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும். எனவே, இந்தத் தாக்குதலில்பாகிஸ்தான் ராணுவத்தில்உள்ள சிலருக்கோ அல்லதுஐஎஸ்ஐ உளவு அமைப்பின்ஆதரவுபெற்ற லஸ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கோ தொடர்புஇருக்கலாம் என்று ராணுவஅதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக ‘பிரஷர் ப்யூஸ்’தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் என்றும் ஜம்மு தாக்குதலில் வெடிகுண்டுகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த நிபுணர்கள்தான் நிச்சயம் இதை தயாரித்திருக்க வேண்டும் என்றும் ராணுவ அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x