Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM

வீரன் அழகுமுத்துக்கோன் 311-வது ஜெயந்தி விழா :

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் 311-வது ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அரசு சார்பில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.வி.மார்க்கண்டேயன், ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ, காங்கிரஸ் சார்பில் மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாளையங்கோட்டையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், ஞானதிரவியம் எம்பி, அப்துல்வகாப் எம்எல்ஏ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் நிஜாம், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளரும், ஆவின் தலைவருமான சுதா பரமசிவன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்டோர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தென்காசியில் உள்ள திமுக அலுவலகத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் மற்றும் நிர்வாகிகள் அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x