Published : 10 Jul 2021 03:13 AM
Last Updated : 10 Jul 2021 03:13 AM

தமிழகத்தில் புதிதாக 3,039 பேருக்கு கரோனா தொற்று :

சென்னை

தமிழகத்தில் புதிதாக 3,039 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 69 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,713, பெண்கள் 1,326 எனமொத்தம் 3,039 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 349, ஈரோட்டில் 230, சேலத்தில் 191, சென்னையில் 180 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 13,098 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 33,224பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 69 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x