Published : 10 Jul 2021 03:13 AM
Last Updated : 10 Jul 2021 03:13 AM

வங்கிக் கணக்கிலிருந்து முறைகேடாக பணம் : எடுக்கப்பட்டால் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் :

கோவை: கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘‘பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து, செல்போன் மூலம் வரும் ஓடிபி எண் மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக மர்ம நபர்களால் பணம் எடுக்கப்பட்டால், உடனடியாக 155260 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களது வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு, மோசடி நபர்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்ட பணத்தை, மோசடி நபர்கள் வெளியே எடுக்க முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கை செய்யப்படும். இதற்கான சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x