Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM
தமிழ்நாடு மாநில உயர்கல்விமன்றம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவராக மீண்டும் பேராசிரியர் அ.ராமசாமியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநில அளவிலான உயர்கல்வி திட்டங்களின் மேம்பாட்டுக்கும் மாநில திட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்கள்போன்றவற்றை ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டப் படிப்புகளுக்கான பாடத் திட்டங்களை தலைப்பு வாரியாக ஆய்வு செய்து, இணை கல்விக் குழுவின் முன் சமர்ப்பித்து அதன் தீர்மானங்களை அரசுக்கு அனுப்பும் பணியையும் இம்மன்றம் ஆற்றி வருகிறது.
2016 முதல் நிரப்பப்படவில்லை
அதன்படி, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக உயர்கல்வித் துறை அமைச்சரும், துணைத் தலைவராக பேராசிரியர் அ.ராமசாமியும், உறுப்பினர் - செயலராக பேராசிரியர் சு.கிருஷ்ணசாமியும், பணி வழி உறுப்பினர்களாக நிதித்துறை செயலர், ஆளுநரின் செயலர், உயர்கல்வித் துறை செயலர், பல்கலைக்கழக மானியக் குழுசெயலர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் உள்ளனர்.
பல்வேறு விருதுகள் பெற்றவர்
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமசாமி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர். அறிஞர் அண்ணா விருது, ராஜாசர் அண்ணாமலை செட்டியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். கடந்த 2006-ல்கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ராமசாமியை இதே பதவியில் அமரவைத்தார். இப்பதவியில் ராமசாமி 2006 முதல் 2011 வரை பணியாற்றினார்.அதேபோல் உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ள க.கிருஷ்ணசாமி, 33 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் இணை பேராசிரியராக வரலாற்றுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தேசிய ஆலோசனைக்குழு, ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டக்குழு, உலக சுற்றுச்சூழல் ஆய்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் உறுப்பினராக பொறுப்பு வகித்ததுடன் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவராவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT