Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM
நாடு முழுவதும் நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 45,892 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளி விவரம் கூறுகிறது.
நேற்றுடன் தொடர்ந்து 30 நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 704 ஆக குறைந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 5 ஆயிரத்து 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 36.48 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரம் கூறுகிறது. இதில் 24 மணி நேரத்தில் 33.81 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
நேற்று முன்தினம் நிலவரப்படி 42.52 கோடி மாதிரிகள் கரோனாசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் நேற்று முன்தினம் மட்டும் 18.93 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதிக்குப் பிறகு கடந்த 6-ம் தேதி குறைந்த அளவாக 553 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர். கரோனா உச்சத்தில் இருந்த கடந்த மே 23-ம் தேதி அதிக அளவாக 4,454 பேர் உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT