Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 03:12 AM
தனியார் பள்ளிகள் நடப்பாண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கல்வித் துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல்சூழல் கருதி தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தில் 75 சதவீததொகையை மட்டும் பெற்றோர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்குமாறாக பெரும்பாலான தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், உரிய காலஅவகாசம் வழங்குவதில்லை எனவும் பல்வேறு புகார்கள் பெற்றோர் தரப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனியார் பள்ளிகள் 75 சதவீத கல்விக் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
கரோனா பேரிடர் சூழலை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தில் 75 சதவீத தொகையை 2 தவணைகளாக வசூலிக்க வேண்டும். முதல் தவணையாக 40 சதவீத தொகையை ஆக.31-க்குள் வசூல் செய்யலாம். பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியதில் இருந்து 2 மாத காலத்துக்குள் 2-ம் தவணையாக 35 சதவீத தொகையை வசூல் செய்ய வேண்டும். மீதமுள்ள 25 சதவீத தொகையை வசூலிப்பது குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.
இதுதொடர்பாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT