Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM
வணிகவரி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வணிகவரித் துறையை சார்ந்த அலுவலர்களின் சேவை குறைபாடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை பரிசீலனை செய்யும் வகையில், ஜூலை 1-ம் தேதி முதல் சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள வணிவகரி ஆணையர் அலுவலகத்தில் புகார் பிரிவு செயல்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 5.45 மணிவரை புகார்களை 044-28514250 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், புகார்களை ‘ctdpetition@ctd.tn.gov.in’ என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT