Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM
திருப்புவனம் அருகே அரசு மகளிர் பள்ளி அமைக்கக்கோரி 19 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இப்பள்ளி 1959-ல் உயர் நிலைப் பள்ளியாகத் தொடங்கப்பட்டு, 1981-ல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 600-க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
சில காரணங்களால் தனியாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 2002-ல் மகளிர் பள்ளி தொடங்குவதற்காக கிராம மக்கள் சார்பில் ரூ.1,00,001வைப்புத் தொகை செலுத்தப்பட்டது. மேலும் 3.32 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் 19 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர் குரு.சோணைமுத்து கூறியதாவது: மகளிர் பள்ளி அமைக்க வேண்டும் என ஏற்கெனவே இருந்த எம்எல்ஏக்கள் 2 முறை சட்டப்பேரவையில் பேசியுள்ளனர். அதன்பிறகும் நட வடிக்கை இல்லை என்றார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘19 ஆண்டுகளுக்கு முன்பு அப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 1,500க்கு மேல் இருந்தது. தற்போது குறைவாக உள்ளது. மேலும் மகளிர் பள்ளி திறப்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்,’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT