Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM
தமிழக முதல்வர் ஸ்டாலினை நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்தோம். தமிழக அரசின் சார்பில் உரிய உதவி இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். சட்டரீதியாக போராடவும் தயாராக உள்ளோம். கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவே போராடுகிறோம்.
ஒரு திரைப்படம் வெளியான பிறகு அதை திரும்பப் பெறலாம் என்ற சூழல், எந்த அளவுக்கு திரைத்துறையை பாதிக்கும் என்பதை எடுத்துச் சொல்லவே வந்துள்ளோம். இதனால் திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகும். மேலும், ஒட்டுமொத்த திரைத்துறையினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT