Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM
மும்பை: மும்பை துறைமுகத்தில் இருந்து 300 கிலோ ஹெராயின் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் ஹெராயின் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.879 கோடி ரூபாய். ஹெராயின் போதைப் பொருளை, ஜிப்சம் மற்றும் டால்கம் பவுடர் என்று கூறி ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக மும்பைக்கு கடத்தப்பட்டதாகவும் அங்கிருந்து பஞ்சாபில் உள்ள பிரப்ஜோத் சிங் என்பவருக்கு ஹெராயின் கடத்தப்பட இருந்தபோது அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, பிரப்ஜோத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த ஒரு வருடமாக ஜிப்சம் மற்றும் டால்கம் பவுடரை இறக்குமதி செய்துள்ளார். பிரப்ஜோத் சிங்கிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகவலை மும்பையில் உள்ள வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT