Published : 04 Jul 2021 03:12 AM
Last Updated : 04 Jul 2021 03:12 AM
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதமடைந்தன.
அருமனையை அடுத்துள்ள இடைக்கோட்டைச் சேர்ந்தவர் செலின்குமார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார். நேற்று அதிகாலை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இவரது கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை தீப்பிடித்து எரிந்தன. செலின்குமார் குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தன.
அதிகாலை 2.10 மணியளவில் 2 நபர்கள் செலின்குமார் வீட்டுக்கு வருவதும், சுற்றுச் சுவருக்கு வெளியே நின்றுகொண்டு பெட்ரோல் குண்டை வீசுவதும், அது வெடித்து வாகனங்கள் எரிவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தன. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
எஸ்பி உத்தரவு
இச்சம்பவம் குமரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT