Published : 04 Jul 2021 03:13 AM
Last Updated : 04 Jul 2021 03:13 AM
மதுரை இதயம் டிரஸ்ட் காப்பகத் தில் குழந்தைகள் விற்பனை செய் யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு காப்பகங்களில் ஆட் சியர் எஸ்.அனீஷ்சேகர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை இதயம் டிரஸ்ட் காப்பகத்தில் குழந்தைகள் விற்கப் பட்ட வழக்கில் காப்பக நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலை யில் மாவட்டத்தில் செயல்படும் காப்பகங்களில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள சேவாஸ்ரமம் குழந்தைகள் காப்பகம், அன்னை சத்தியா குழந்தைகள் காப்பகம், கடச்ச னேந்தலில் உள்ள கிருபா முதியோர் காப்பகங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். உணவு, பாதுகாப்பு, காப்பக நிர்வாகிகளின் செயல்பாடு போன்றவை தொடர்பான தகவல் களை காப்பகங்களில் தங்கியுள் ளோரிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
மாவட்டத்திலுள்ள அனைத்து காப்பகங்களிலும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT