Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM
கோவை: கோவையை சேர்ந்த தம்பதியின் 17 வயதில் மகள், கடந்த 23-ம் தேதி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த பூவரசன்(18) என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இவர் கோவையில் சோப்பு கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதையடுத்து, போலீஸார் வேதாரண்யம் சென்று சிறுமியை மீட்டனர். விசாரணையில், சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. பூவரசன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்த போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT