Published : 30 Jun 2021 03:13 AM
Last Updated : 30 Jun 2021 03:13 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது - ‘நீட்’ ஆய்வு குழுவுக்கு அனுமதி பெறப்பட்டதா? : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை

நீட் தேர்வு தொடர்பாக ஆராய குழு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டதா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை அமைத்து கடந்த ஜூன் 10 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது. ஒருவேளை நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் அதற்கான மாற்று வழி குறித்தும், அதை அமல் படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அரசாணை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணைக்கு தடை விதிக் கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டதாவது:

நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள சட்டம் நாடு முழுவதற்கும் பொது வானது. அதை மீறி மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது. மருத்துவக் கல்வியை மேம்படுத்து வதற்கான ஆலோசனைகளை மருத் துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும், ஆனால் அதை மீறி தமிழக அரசு தனியாக ஒரு குழுவை அமைத்து இருப்பது மாணவர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனைக் கருத்தில் கொண்டுமே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஏழை மாணவர் கள் மருத்துவப் படிப்பில் சேர ஏதுவாக ஏற்கெனவே அரசுப்பள்ளி மாணவர் களுக்கு பிரத்யேக இட ஒதுக்கீடு வழங் கப்படுகிறது. எனவே நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட் டுள்ள குழுவை ரத்து செய்ய வேண் டும். அதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு தங்களது வாதத்தில் தெரிவித்தனர்.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிடும்போது, "தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அதன் காரணமாக குழு அமைக்கப் பட்டுள்ளது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது’ என அறிவுறுத்தினர். மேலும், இதுதொடர் பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப் பினர். அதற்கு இதுதொடர்பாக விளக் கம் பெற்று தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரினார். அதையடுத்து நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x